அதிமுக நகர செயலாளர் கொலை:2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருவண்ணாமலை அதிமுக நகர செயலாளராக இருந்த கனகராஜ் என்பவருக்கும், திமுக பிரமுகர் பங்க் பாபு என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. 

அதிமுக நகர செயலாளர் கொலை:2 பேருக்கு ஆயுள்

இந்நிலையில் கனகராஜ், 12-02-2017ம் தேதி காலை 7 மணியளவில் நடைபயிற்சி முடிந்து அண்ணாமலையார் கோவில் திருமஞ்சன கோபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அவர் வருவதை அறிந்த சரவணகுமார் என்பவர் கனகராஜ் மீது இருசக்கர வாகனத்தில் வந்து மோதினார். 

கனகராஜ்


இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கனகராஜை பங்க் பாபு மற்றும் ராஜா ஆகியோர் வீச்சரிவாள் மூலம் தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில் கனகராஜ், அதே இடத்தில் உயிரிழந்தார்.

இது சம்பந்தமாக திருவண்ணாமலை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து பங்க் பாபு, ராஜா மற்றும் சரவணகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த பங்க் பாபு, காந்தி நகரில் உள்ள ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 2018-ஆம் ஆண்டு இச்சம்பவம் நடைபெற்றது. பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததாக சொல்லப்படுகிறது. 

கனகராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கு திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அரசு தரப்பில் 17 சாட்சிகள் மற்றும் 30 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 


இந்த வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மதுசூதனன், குற்றவாளிகள் ராஜா, சரவணக்குமார் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.