இப்படி ஒரு அன்னதானமா? நேரில் பார்த்து வியந்த கலெக்டர்

கிரிவலப்பாதையில் பிரமாண்டமாக நடைபெறும் அன்னதான கூடத்திற்கு நேரில் சென்ற கலெக்டர் தர்ப்பகராஜ் அங்கு உணவு அருந்தியதோடு, அன்னதான குழுவினருக்கு பாராட்டும் தெரிவித்தார்.  

திருவண்ணாமலையில் இன்று சித்ரா பவுர்ணமியை யொட்டி 25 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் 14 கிலோ மீட்டர்  தூரமுள்ள மலையை வலம் வந்து அண்ணாமலையாரை மகாதீபத்தை வழிபட்டனர். பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டன.

ஆணாய்பிறந்தான் ஊராட்சிக்கு உட்பட்ட துர்வாசர் கோயில் அருகில் அருள்மிகு அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் அன்னதான குழு சார்பில் 12-வது ஆண்டாக மாபெரும் மகா அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை நகராட்சி 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீதேவிபழனி தலைமையில் குழுவின் தலைவரும், முன்னாள் ஆணாய்பிறந்தான் ஊராட்சி மன்ற தலைவருமான கே.தர்மராஜ் கிரிவல பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை துவக்கி வைத்தார்.

இப்படி ஒரு அன்னதானமா? நேரில் பார்த்து வியந்த கலெக்டர்

இன்று (11-5-2025) காலை 6.30 மணிக்கு தொடங்கிய அன்னதானம் நாளை வரை தொடர்ந்து நடக்கிறது. 

கிரிவலப்பாதையில் சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர் தர்ப்பகராஜ், பிரமாண்ட முறையில் அன்னதானம் நடைபெறும் மேற்கண்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவரை அன்னதான குழுவின் தலைவர் தர்மராஜ் வரவேற்றார். அங்கு உணவு வாங்கி சாப்பிட்ட அவர், விதிமுறைகளை சரியாக பின்பற்றி அன்னதானம் நடைபெறுவதற்கு பாராட்டு தெரிவித்தார்.    

2 நாட்களுக்கு  சாம்பார், ரசம், மோர் மற்றும் கூட்டு, பொரியலுடன் 2 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுவதாக அன்னதான குழு பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். 

இந் நிகழ்ச்சியில் அன்னதானக்குழு செயலாளர் ஏ.எஸ்.கருணாநிதி பொருளாளர் கே.நாராயணசாமி கௌரவ தலைவர் ரமணா ஜி.பழனி துணை தலைவர் ஆர்.விஜயகுமார் துணை செயலாளர் எம்.கார்த்திவேல் விழா குழுவை சேர்ந்த டி.முருகன் எம்.அய்யனார் வி.வன்னியராஜா எஸ்.கருணாநிதி எஸ்.சசிகுமார் ஆர்.தனகோட்டி ப.கிஷோர் பழனி, மற்றும் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக அண்ணாமலையார், உண்ணாமலையார் படம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மக்களின் பசிப்பிணியை போக்க காசியில் ஓர் ஆண்டு முழுவதும் செய்யப்படும் அன்னதானத்தை விட திருவண்ணாமலையில் செய்யப்படும் அன்னதானம் அதிக புண்ணியத்தை தரும் என்பதால் தொடர்ந்து  அன்னதானம் வழங்கி வருவதாக அண்ணாமலையார்-உண்ணாமலையம்மன் அன்னதான குழுவினர் தெரிவித்தனர்.