இறந்தவர்களின் பெயர்களிலேயே பல பட்டாக்கள்

பல நிலங்களின் பட்டாக்கள் இறந்தவர்களின் பெயரிலேயே இருப்பதால் அதை உரிமையாளர்களின் பெயர்களில் மாற்றிக் கொள்ளுமாறு கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். 

இறந்தவர்களின் பெயர்களிலேயே பல பட்டாக்கள்

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும்,https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

இறந்தவர்களின் பெயர்களிலேயே பல பட்டாக்கள்

இருப்பினும், பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுள் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.

எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொது மக்கள் உரிய ஆவணங்களுடன் இ.சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

இறந்தவர்களின் பெயர்களிலேயே பல பட்டாக்கள்

மேற்படி விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் எதிர்வரும் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும். 

இவ்வாறு கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments