2 பேரை காவு வாங்கிய ஹேப்பி பர்த்டே பேனர்

திருவண்ணாமலையில் ஹேப்பி பர்த்டே பேனரை கட்டிய போது 2 பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள். 

2 பேரை காவு வாங்கிய ஹேப்பி பர்த்டே பேனர்

திருவண்ணாமலை நகரம் அண்ணாநகர் 5வது தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் லோகேஷ்(15). திருவண்ணாமலை நகரம் திருநகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் தனுஷ்குமார்(18). தனுஷ்குமார் சமீபத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வை எழுதியுள்ளார். 

இவர்களும், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணனும் நண்பர்கள். இன்று கண்ணனின் பிறந்த நாளுக்காக நேற்று இரவு சுமார் 11:30 மணியளவில் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் வாழ்த்து பேனரை லோகேஷ் மற்றும் தனுஷ்குமார் உள்ளிட்ட நண்பர்கள் கட்டியுள்ளனர். அப்போது பேனரின் மேல்பக்கத்தில் கயிறு கட்டுவதற்கு லோகேஷ் மற்றும் தனுஷ்குமார் இருவரும் டிரான்ஸ்பார்மர் மீது ஏறினர். 

2 பேரை காவு வாங்கிய ஹேப்பி பர்த்டே பேனர்

அப்போது எதிர்பாராத விதமாக 2 பேர் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை நகர போலீசார் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேரை காவு வாங்கிய ஹேப்பி பர்த்டே பேனர்

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து பேனர் கட்டும் போது 2 பேர் மின்சாரம் பாய்ந்தது இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.